ஆர்.குணா கோலாலம்பூர், அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு நடை பெற்ற யோகா தின நிகழ்வில் ஏறக்குறைய 3,035 பேர் கலந்து கொண்டது மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மலேசிய யோகா விளையாட்டு சங்கம், மலேசிய இந்துதர்ம மாமன்றம், மலேசிய இளைய தலைவர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நேற்று காலை 6 மணியிலிருந்து காலை 11 மணி வரையில் டத்தாரான் மெர்டேகாவில் இந்த மாபெரும் யோகா தின நிகழ்வு நடைபெற்றது. மலேசி யாவிற்கான இந்தியத் தூதர் டி.எஸ். திருமூர்த்தி உட்பட பலர் இதில் சிறப்புப் பிரமுகர் களாகக் கலந்துகொண்டனர். சூரிய நமஸ்காரம் தொடங்கி இசையுடன் கூடிய தியானம், தசை தளர்வு திறன், யோகா நித்ரா, ஜூம்பா ஆகியவை இந்த யோகா தின நிகழ்வில் இடம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.